நீயே சொல் MCC


இதோ முடிந்துவிட்டது!
என் வாழ்வின் இனிமையான பக்கங்கள்
இதோ முடிந்துவிட்டது!
கண் மூடி திறக்கும் முன்
மூன்று வருடங்கள் முடிந்து விட்டது!
இதோ போகிறேன்
உயிருள்ள பிணமாய்
என் இறுதி ஊர்வலத்தில்
நான் விட்டுச் சென்ற
நினைவுகளை தேடி!
காலியாய் இருக்கும் வகுப்பறைகள்,
மர பெஞ்ச்சுகள்,
அதன் கல்வெட்டுக்கள்,
என எல்லாம் கடந்து போகிறேன்!
மலர் தூவும் மரங்கள்,
அந்த மலர் மறைக்கும்,
தார் ரோடுகள்,
அதில் விளையாடும் மான்கள்,
என எல்லாம் கடந்து போகிறேன்! ஒருவேளை,
கடந்து போவது தான் வாழ்க்கையோ?
விடை தெரியவில்லை!
உன்னிடம் விடைபெற்றுப்
போகவும் மனமில்லை!
என் செய்வேன்?
நீயே சொல்
என் இனிய MCC!
Live Love MCC!

                            -மகி

Comments

Post a Comment

Popular Posts