Skip to main content

Posts

Featured

அன்பு சூழ் உலகு

வழக்கத்தை விட அதிகமாக மூச்சு வாங்குகிறது வியர்த்துக் கொட்டுகிறது துணைக்கு யாரவது இருந்தால்  நல்லாயிருக்கும் இந்த இருட்டில் யார் வருவார்?  என் கேள்விக்கு பதிலாகத் தூரத்தில் காற்றைத் துழாவிய படி  வந்த கைகளை  ஓடிச் சென்று பற்றிக் கொள்கிறேன் அவருக்கு வழி காட்டுவது போல விழியின் மொழி தெரியாத அவருக்கு என் தொடுதல் புரிந்திருக்க வேண்டும் இன்னும் இருக்கமாகப் பற்றிக் கொள்கிறார் என் கைகளை இப்படி ஒவ்வொரு முறையும் கடவுளின் பிள்ளைகள்  வந்துகொண்டே இருக்கிறார்கள் சக மனிதனின் உருவத்தில்...                                   -மகி

Latest posts

ஒரு வரிக் கவிஞர்கள்

எப்படியும் மிஞ்சும்

அக்கறைக்கு நன்றி!

அவ்வளவு தான்

புதியன கழிதல்

முதல் நீ

அகம்

அவ்வளவே

வன்முறையாகாதா?

வெற்றுக் காகிதம்