வன்முறையாகாதா?

வரிசையில் நின்று
புளியோதரை வாங்கியவன்
தனக்குப்பின் நின்றும் வாங்க வாய்ப்பில்லாமல் போனவனிடம்
"புளியோதரை ரொம்ப ருசியா இருக்கும்" என்பதும் 

"எங்களுக்கு தெரியாதா புளியோதரை எப்படி இருக்கும்னு
.........

இப்படித்தான் இருக்கிறது சில காதலிப்பவர்களுக்கும் காதலிக்காதவர்களுக்கும்
இடையிலான உரையாடல்.


புரிந்து கொள்ளுங்கள்
காதலும், கல்யாணமும்
வென்றே தீர வேண்டிய போட்டியோ
கிடைத்தே ஆக வேண்டிய பொருளோ அல்ல

காதலிப்பதிலும் காதலிக்காமல் இருப்பதிலும் எந்தப் பெருமையும் இல்லை.

காதல் என்பது பூ ஆகவே இருக்கட்டும். எல்லா மரங்களிலும் பூ பூக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வன்முறையாகாதா?

                           -அகல்

Comments

Popular Posts