Monday, 29 August 2022

அன்பு சூழ் உலகு

வழக்கத்தை விட அதிகமாக மூச்சு வாங்குகிறது
வியர்த்துக் கொட்டுகிறது
துணைக்கு யாரவது இருந்தால் நல்லாயிருக்கும்
இந்த இருட்டில் யார் வருவார்? 

என் கேள்விக்கு பதிலாகத்
தூரத்தில் காற்றைத் துழாவிய படி 
வந்த கைகளை 
ஓடிச் சென்று பற்றிக் கொள்கிறேன்
அவருக்கு வழி காட்டுவது போல

விழியின் மொழி தெரியாத அவருக்கு
என் தொடுதல் புரிந்திருக்க வேண்டும்
இன்னும் இருக்கமாகப் பற்றிக் கொள்கிறார்
என் கைகளை

இப்படி ஒவ்வொரு முறையும்
கடவுளின் பிள்ளைகள் 
வந்துகொண்டே இருக்கிறார்கள்
சக மனிதனின் உருவத்தில்... 

                                 -மகி

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...