Saturday, 30 November 2019
Saturday, 9 November 2019
நம்பிக்கை அதான எல்லாம்
நம்புங்கள்!
சரியோ தவறோ ஆணித்தரமாக நம்புங்கள்!
மற்றவர்களையும் நம்ப வையுங்கள்!
நம்பிக்கையின் அடிப்படையில் தான்
எல்லாம் முடிவு செய்யப்படுகிறது!
நீதியும், நீதிமன்றங்களும்
மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல!
ஒருவர் பிறந்திருக்கலாம் என்ற நம்பிக்கை
இன்னொருவர் இறந்த உண்மையை விட
வலிமையானதாக மாறலாம்!
எல்லாம் அதை
நம்புபவர்களின்
எண்ணிக்கையிலும்,
அவர்கள் வகிக்கும் பதவிகளிலும்,
அவர்களின் ஆயுதங்களிலும் இருக்கிறது!
எனவே நம்புங்கள்
நம்பிக்கையின் பெயரில்
உங்களுக்கான நீதி வழங்கப்படும்!
நம்பிக்கை அதான எல்லாம்!
பி.கு.: இந்த கவிதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல!
-மகி
தவற விட்டு விடக்கூடாது
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...
-
உரையாடல்... நீளும்.. சலிக்காது.. தீண்டல்... தித்திக்கும்.. திகட்டாது.. ஊடல்.. உரைக்கும்..உடைக்காது... காதல்.. தேடும்.. தொடரும்... ...
-
எப்போதும் பார்த்து சிரிக்கும் லிப்ட் ஆப்பரேட்டர் தான் இன்று ஏனோ என்னால் முடியவில்லை... முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டேன்! மேனேஜரிடம் வாங...
