நம்பிக்கை அதான எல்லாம்
நம்புங்கள்!
சரியோ தவறோ ஆணித்தரமாக நம்புங்கள்!
மற்றவர்களையும் நம்ப வையுங்கள்!
நம்பிக்கையின் அடிப்படையில் தான்
எல்லாம் முடிவு செய்யப்படுகிறது!
நீதியும், நீதிமன்றங்களும்
மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல!
ஒருவர் பிறந்திருக்கலாம் என்ற நம்பிக்கை
இன்னொருவர் இறந்த உண்மையை விட
வலிமையானதாக மாறலாம்!
எல்லாம் அதை
நம்புபவர்களின்
எண்ணிக்கையிலும்,
அவர்கள் வகிக்கும் பதவிகளிலும்,
அவர்களின் ஆயுதங்களிலும் இருக்கிறது!
எனவே நம்புங்கள்
நம்பிக்கையின் பெயரில்
உங்களுக்கான நீதி வழங்கப்படும்!
நம்பிக்கை அதான எல்லாம்!
பி.கு.: இந்த கவிதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல!
-மகி
😍😘
ReplyDelete