தொலைதூரக் காதல்

  கண்கள் பேசாது..
  இதழ்கள் சேராது..
  விரல்கள் கோர்க்காது..
  தோள்கள் உரசாது ..

  காணவியலாது
  உடற்பொழுதில் கோபம் கொள்ளும்
  உன் கண்களை ..

  ஏந்தவியலாது
  நாணத்தால் சிவக்கும்
  உன் கன்னத்தை ...

  உன் குரலை மட்டும்
  கேட்டுக்கொண்டு
  கூட்டுக்குயிலாய்
  உயிர் வாழ்கிறேன்..

  உன் குறுஞ்செய்தி ஒன்றைக்
  கண்டால் தான்
  உறக்கம் கூட தழுவும்
  என்னை ..

  காணத் துடிக்கிறேன்
  இயலாமை எண்ணித்
  தவிக்கிறேன் ..
  
  தொலைதூரக் காதல்
  தவிக்க விட மாட்டேன்.. 
  தொடும் தொலைவில் இல்லை..
  தொலைத்துவிட மாட்டேன்..

  உன் வில் கோர்க்க விழைகிறேன்..
  விரைகிறேன்...
  விரைவில்...
                           -எழில்




Comments

Popular Posts