நிலையற்ற மனிதர்களுக்கு மத்தியில்
நான் கேவலம் ஒரு
நெகிழியாக இருந்து விட ஆசைப்படுகிறேன்!
காரணம் அடுத்தவர்களை
அழிப்பதற்காக அல்ல
என்னை யாரும் அழித்துவிட
கூடாது என்பதற்காகத்தான்!
அடுத்தவர்களால் பயன்படுத்ப்பட்டு
தூக்கியெறியப்பட்ட பின்னும்
அவர்களை நினைத்து மக்கியது போதும்!
இனியும் எறியப்பட்டால்
நெகிழ்ந்து போகாமல்
நெகிழியைப் போல
அப்படியே இருப்பேன்
நூற்றாண்டுகள் கடந்தும்!
அவ்வளவு அக்கறை இருந்தால்
அவர்களே என்னை துடைத்து
எடுத்துக் கொள்ளட்டும்!
மறுசுழற்சிக்கு என்றும்
நான் மறுப்பதில்லை!
நான் கேவலம் ஒரு
நெகிழியாக இருந்து விட ஆசைப்படுகிறேன்!
காரணம் அடுத்தவர்களை
அழிப்பதற்காக அல்ல
என்னை யாரும் அழித்துவிட
கூடாது என்பதற்காகத்தான்!
அடுத்தவர்களால் பயன்படுத்ப்பட்டு
தூக்கியெறியப்பட்ட பின்னும்
அவர்களை நினைத்து மக்கியது போதும்!
இனியும் எறியப்பட்டால்
நெகிழ்ந்து போகாமல்
நெகிழியைப் போல
அப்படியே இருப்பேன்
நூற்றாண்டுகள் கடந்தும்!
அவ்வளவு அக்கறை இருந்தால்
அவர்களே என்னை துடைத்து
எடுத்துக் கொள்ளட்டும்!
மறுசுழற்சிக்கு என்றும்
நான் மறுப்பதில்லை!
-மகி

No comments:
Post a Comment