கொட்டும் கோடை மழையில்
குடையின்றி நனைகிறேன்..
அருகே அவளில்லை..
எண்ணத் துணிவில்லை..
புல்நுனியில் அவள் பிம்பம்
சட்டென்று உடைகிறது....
என் மனம் அவள் இழப்பை
உணர மறுக்கிறது..
என் விந்தை உயிர்வித்தவள்
அவள் உயிரை விட்டுவிட்டாள்..
குழந்தையாய் பாவித்தேன்...
என் கையில் தவழுகிறாள்..
-எழில்
Comments
Post a Comment