Tuesday, 13 July 2021

பாவப்பட்ட கடவுளுக்கு...

பாவப்பட்ட கடவுளுக்கு...

படைத்தவன் நீர் என்ற ஊரார் பிதற்றலை 
ஒரு பேச்சுக்கு ஏற்று என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன்.
உன் படைப்புகளின் பிழைகளை அடிக்கோடிடும்
உம் படைப்புகளுள் ஒருத்தி நான்.
சௌகரியமாய் சாதி செய்து
அது வழியில் 
அடக்குதலையும் ஒடுக்குதலையும்
உன்பெயர் சொல்லியே நிகழ்த்துகிறார்கள் நீ படைத்த மனிதர்கள்.
உன்னிருப்பு உண்மையானால் வந்து சொல்லிவிடு "இதற்கும் உனக்கும் பங்கு இல்லை என்று"
இல்லையெனில்
சாதியை மட்டுமல்ல உன்னையும் சேர்த்து ஒழிக்கப் போராடுவேன்.

இப்படிக்குக்
கருஞ்சட்டை கிழவன் விதைத்த விதை அன்றி வேறு யார்?

                                -அகல்

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...