அன்பின் எச்சம்
அவர்கள் சந்தோஷமாகவோ
துக்கமாகவோ
தனிமையாகவோ இருக்கும் போது
அவர்களிடம் நமத்துபோயிருந்த
அன்பின் எச்சத்தை தருகிறார்கள்
நாய்க்கு போடும் ரொட்டியை போல!
சில சமயம் தடவி விடுகிறார்கள்!
கொஞ்சவும் செய்கிறார்கள்!
எல்லாம் அந்த நொடி மட்டுமே!
இது எதுவுமே தெரியாத நாய்
அடுத்த நாள் சென்று
அன்பின் எச்சத்திற்காக காத்திருந்து
திரும்பி வருகிறது!
மீண்டும்! மீண்டும்!
Comments
Post a Comment