சுட்டெரிக்கும் வெயிலில்
பிளாட்பார நிழலில் அமர்ந்து
தன் இருபது மகனுக்கு
தலை சீவி விடும் அவளுக்கும்
தன் எழுவது மனைவியை
மெல்ல கை பிடித்து செல்லும்
அந்த பார்வையற்றவருக்கும்
தெரிவதே இல்லை வெயில்!
உண்மையில்
அன்பின் மழைக்கு
வெயில் தெரியாது!
~ மகி