எங்கு செல்லுமோ இந்த பாதை?

காஷ்மீர் எல்லையில்
கொல்லப்பட்டால் இந்தியன்
அதுவே,
குமரி எல்லையில்
கொல்லப்பட்டால் தமிழன்
என்ன ஒரு ஆச்சர்யம்???
ஈழத்தில் எம் உறவுகளை
கொன்றபோதும் வேடிக்கைப்பார்த்தீ்ற்கள்!
இப்போது,
எம்மையும் அழிக்கப்பார்க்கிறீர்!
பிறர்க்கு அளித்து வாழும்
தமிழனையே அழிக்க துடிக்கிறீர்!
தமிழனின் பெருமையை
தமிழனையே அறியவிடாமல்
கீழடியில் வைத்து புதைத்துவிட்டீர்!
எம் உணவுப் பட்டியலைக் கூட
உம்மிடம் தாரைவார்த்துவிட்டோம்!
உண்பது உணவுதானா என்ற
சந்தேகமும் எழுகின்றது!
இதற்குமேலும் உணர்வின்றி இருந்தால்
உயிரற்ற உடலென்று எரித்துவிடுவீர்களோ
என்ற பயமும் எழுகின்றது!!!
                                       
                                           - மகி

Comments

Popular Posts