Thursday, 6 July 2017

பள்ளி

புழுதிக்காட்டில் அற்பப் பதராய்
சுற்றித்திரிந்த என்னை
புத்தகத்தோடு அள்ளி
அணைத்த பள்ளியே!!!
பால்வாசம் மறவாத என்னை
பாங்கோடு சீராட்டி பாராட்டி வளர்த்தாயே!
கடவுள் மீது நான்கொண்ட
சந்தேகத்தை நீக்கி
ஆசான் என்ற அன்புத்
தந்தையைத் தந்தாயே!
எங்கோ பிறந்தவனை
என் உயிரில் கலக்கச்செய்து
என் நண்பன் என்றாயே!
இப்பேதையை நீ ஞானியாக
மாற்றினாயோ இல்லையோ
நல்ல மனிதனாக உயர்தினாய்!
இத்தனை கற்றுத்தந்த நீ
உன் நினைவை அறுத்தெறிய
சொல்லித்தராமல் சென்றாயே!!!
                     
                                                 -மகி

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...