Tuesday, 9 January 2018

கண்ணீரும் காதலியும்

என் கண்கள் தாண்டி
கன்னம் தொடும் கண்ணீரே
என் கவலைகள்
கடலென இருப்பதால் தானோ
நீயும் உப்புக்கரிக்கிறாய்?
கண்களில் இருந்து வடியும்
கண்ணீர் மட்டுமல்ல,
உன்னைப் பார்க்கையில்
என் கவலைகளும் காற்றோடு
கரையும் மாயம் என்னவோ?
அடை மழையிலும்
உன் நினைவுகள் என்னை
உயிரோடு எரிக்க
என் இதயத்தை விட்டு
நீயும் நகராமல் நிற்பதேனோ???

                                     -மகி

Monday, 1 January 2018

நான்

நான் செல்லும் பாதை புரியவில்லை
வழியும் சரிதானோ தெரியவில்லை
இடையிடையே குழப்பங்கள்
என்னிலை மாற்றும் தருணங்கள்
ஒன்றோ ரெண்டோ ஏற்றுக்கொள்ளலாம்
பலமுனை போட்டி போல
பலரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன்
நான் யாராக வேண்டும்
எனக்கே தெரியவில்லை
நானாகவே இருக்கிறேன் என்றால்
'நான்' எங்கே என்று தெரியவில்லை
நினைவுகளுக்கும் ஆசைகளுக்கும் இடையில்
தொலைத்து விட்டேன் போல் என்னை நானே
தேடுகிறேன் ஒரு நாள் 'நான்' கிடைப்பேனென்று
நான் யாரென்று தெரியாமலேயே!
 
                                        -இருதயா

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...