நான்

நான் செல்லும் பாதை புரியவில்லை
வழியும் சரிதானோ தெரியவில்லை
இடையிடையே குழப்பங்கள்
என்னிலை மாற்றும் தருணங்கள்
ஒன்றோ ரெண்டோ ஏற்றுக்கொள்ளலாம்
பலமுனை போட்டி போல
பலரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன்
நான் யாராக வேண்டும்
எனக்கே தெரியவில்லை
நானாகவே இருக்கிறேன் என்றால்
'நான்' எங்கே என்று தெரியவில்லை
நினைவுகளுக்கும் ஆசைகளுக்கும் இடையில்
தொலைத்து விட்டேன் போல் என்னை நானே
தேடுகிறேன் ஒரு நாள் 'நான்' கிடைப்பேனென்று
நான் யாரென்று தெரியாமலேயே!
 
                                        -இருதயா

Comments

Popular Posts