போர் ! ஆமாம் போர் !

அறுபது வயதிலும் அயராமல்
அழகிகளுடன் ஆடும் இவருக்கு,
அரசியலுக்கு வர முடிவெடுப்பதற்குள்
முடியனைத்தும் கொட்டிவிட்டது!
தமிழன் என்று சொல்லிக்கொள்வார்
அதேநேரத்தில்
தமிழனுக்கு பிரச்சினை வந்தால்
தலைமறைவாகிவிடுவார்!
எதற்கெடுத்தாலும் கையை மேலே
காண்பிப்பதாலோ என்னவோ
காவி வேட்டிகளும்,கட்சிகளும்
இவரை பின்தொடர்கின்றனர்!
தலைவா!!!தலைவா!!!
என்று கோஷமிட்ட கூட்டம்
இப்போது நாட்டுக்கே தலைவராக்க
துணிந்து விட்ட சோகம்!
கூத்தாடியை கும்பிட்டு
என் பாட்டன் தவறு இழைத்தான்
அந்த பாவம் என் கால்களை
இன்னும் சுற்றுகிறது!
என் பிள்ளையயையும் அது சுற்றுமோ?
அவர்களை குறைகூறவில்லை
அனைவரும் நல்ல நடிகர்கள்
ஆனால்
எல்லா இடத்திலும் நடிக்காதீர்கள்!!!
                                            -மகி

Comments

Popular Posts