கண்ணீரும் காதலியும்
என் கண்கள் தாண்டி
கன்னம் தொடும் கண்ணீரே
என் கவலைகள்
கடலென இருப்பதால் தானோ
நீயும் உப்புக்கரிக்கிறாய்?
கண்களில் இருந்து வடியும்
கண்ணீர் மட்டுமல்ல,
உன்னைப் பார்க்கையில்
என் கவலைகளும் காற்றோடு
கரையும் மாயம் என்னவோ?
அடை மழையிலும்
உன் நினைவுகள் என்னை
உயிரோடு எரிக்க
என் இதயத்தை விட்டு
நீயும் நகராமல் நிற்பதேனோ???
-மகி
Comments
Post a Comment