Tuesday, 9 January 2018

கண்ணீரும் காதலியும்

என் கண்கள் தாண்டி
கன்னம் தொடும் கண்ணீரே
என் கவலைகள்
கடலென இருப்பதால் தானோ
நீயும் உப்புக்கரிக்கிறாய்?
கண்களில் இருந்து வடியும்
கண்ணீர் மட்டுமல்ல,
உன்னைப் பார்க்கையில்
என் கவலைகளும் காற்றோடு
கரையும் மாயம் என்னவோ?
அடை மழையிலும்
உன் நினைவுகள் என்னை
உயிரோடு எரிக்க
என் இதயத்தை விட்டு
நீயும் நகராமல் நிற்பதேனோ???

                                     -மகி

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...