கவிதைகளின் கருவாக
விளங்கும் பெண்களை
நாம் காகிதம் போல
கசக்கி எறிவது சரிதானோ?
மீசைவைத்த மிருகத்திற்கு அவளோ
ஒருமுறை தான் இரையானாள்
காப்பாற்றுங்கள் என்று அவள்
கதறிய போது வர மறுத்தவரெல்லாம்
கருத்து கூறி அவளை
பல முறை கொன்றனர்!
அடுப்பங்கரை முதல்
ஆடை கட்டுப்பாடு வரை
வஞ்சிக்கப்படும் பெண்களை
தினமும் வாழ்த்த மனம் இல்லை
என்றாலும்,
நிம்மதியாய் வாழவிடலாமே!!!
- மகி
Tuesday, 20 February 2018
பெண்ணியம் பழகுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
தவற விட்டு விடக்கூடாது
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...
-
உரையாடல்... நீளும்.. சலிக்காது.. தீண்டல்... தித்திக்கும்.. திகட்டாது.. ஊடல்.. உரைக்கும்..உடைக்காது... காதல்.. தேடும்.. தொடரும்... ...
-
எப்போதும் பார்த்து சிரிக்கும் லிப்ட் ஆப்பரேட்டர் தான் இன்று ஏனோ என்னால் முடியவில்லை... முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டேன்! மேனேஜரிடம் வாங...
Awesome my son
ReplyDelete