பெண்ணியம் பழகுவோம்

கவிதைகளின் கருவாக
விளங்கும் பெண்களை
நாம் காகிதம் போல
கசக்கி எறிவது சரிதானோ?
மீசைவைத்த மிருகத்திற்கு அவளோ
ஒருமுறை தான் இரையானாள்
காப்பாற்றுங்கள் என்று அவள்
கதறிய போது வர மறுத்தவரெல்லாம்
கருத்து கூறி அவளை
பல முறை கொன்றனர்!
அடுப்பங்கரை முதல்
ஆடை கட்டுப்பாடு வரை
வஞ்சிக்கப்படும் பெண்களை
தினமும் வாழ்த்த மனம் இல்லை
என்றாலும்,
நிம்மதியாய் வாழவிடலாமே!!!
           
                                            - மகி

Comments

Post a Comment

Popular Posts