உயிரே

என் உயிரே!
நான் உன்னை நெஞ்சில் சுமக்க
நீயோ என்னையும் என் உயிரையும்
நெஞ்சிலும்  வயிற்றிலும் சுமந்தாய்!
என் உயிர்க்கு உயிர் கொடுக்க
உன் உயிரை தந்துவிட்டாய்
பிறந்தது என் உயிர் என்றாலும்
உயிர்க்கு உரியவள் நீ அல்லவா?
நீயின்றி தவிக்கும் என் உயிரை
என் செய்வேன் சொல் உயிரே!
 
                                       -மகி

Comments

Popular Posts