Tuesday, 7 August 2018

இருள் மீளா இரவு

கட்டுமரமே...
கண்ணீரில் மிதக்கும்
உன் தொண்டர்களுக்கு
எப்படிச் சொல்வேன்
அவர்களை கரைசேர்க்க
நீ வர மாட்டாயென்று!

உனக்கான முடிவை
வெறும் விடுமுறையாக
பார்த்த வன்முறையாளர்களில்
நானும் ஒருவன்!

நான் உன் அரசியல்
தொண்டன் இல்லை!
ஆனால் நிச்சயம் சொல்வேன்
உன் காந்தத் தமிழின்
ரசிகன் என்று!

மூச்சுள்ள வரை அண்ணா
மனதில் இடம் கேட்டாய்!
முக்தியான பின்னும் அண்ணா
அருகில் இடம் கேட்கிறாய்!
உன் பற்றை என் சொல்வேன்?

சூரியன் கடலில் தானே மறையும்!
கரையில் என்ன வேலை?
என்று மெரினாவை
அவர்கள் தர மறுத்தார்களோ?
எது என்னவென்றாலும்
எங்கள் இரவு விடியாது
என்பது மட்டும் உண்மை!

                              -மகி

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...