கிழவா
நீ பேசி பல நாட்கள் ஆகிவிட்டது
ஆனால் சில நாட்களாக
உன்னைப் பற்றியே பேசுகிறோம்!
உன் தளுதளுத்த குரலில்
"தமிழர்களே தமிழர்களே" என்றழைக்க
நீ வர மாட்டாயா?
உன்னை வசைபாடிய வாய்தான்
இன்று
உன் வாஞ்சையான
வாய்மொழியை கேட்க துடிக்கிறது!
நீயோ கருப்பு சட்டைக்காரன்!
உன்னை காக்க பராசக்தி
வரமாட்டாள்!
இருந்தும் பராசக்தியை
மறவாமல் எழுதினாய்!
இரண்டு இலைகளும்
விழுந்து விட்டதே
இனி எதற்கு சூரியன்
என்று நினைத்து மறைந்துவிடாதே!
அம்மாவும் இல்லை
அய்யன் நீயும்
இனி இல்லையென்றால்
நாங்கள் என் செய்வோம்?
திராவிடம் ஆண்ட மண்ணில்
காவிகளின் கரை படிய
நீ வழி வகுக்காமல்
கண்கள் விழித்து வா!
தமிழ்நாட்டை காக்க
வரா விட்டாலும்
உன் தமிழைக் காக்க
பிழைத்து வா!
- மகி
Comments
Post a Comment