வேடிக்கை பார்ப்பவன்

மழையே நீ மறைந்து விடு!
கட்டியணைக்க வேண்டிய உன்னை
கம்பிகளின் வழியே
வேடிக்கை பார்ப்பவன் நான்!
உன் சின்ன முத்துக்களுக்கு
முகங்கொடுக்க நேரமில்லை
முடிந்தால் ஸ்டேட்டஸ் போடுகிறேன்!
நீ தர வேண்டிய
மண் வாசனை மட்டும்
பாக்கி இருக்கிறது!
அது சரி!
மலட்டு நிலத்திற்கேது மண்வாசனை?
இத்தனை பேசும் என்னை
யாரென்று மட்டும் கேட்காதே!
நான்
நகரவாசியாவும் இருக்கலாம்
நரகவாசியாவும் இருக்கலாம்!

                                         -மகி

Comments

Popular Posts