அன்புள்ள மகளுக்கு...

என் கருவில் கலந்தவளே
உன்னை சுமப்பவளின்
பிதற்றல் இது!
செல்ல மகளே
உன் சின்ன உதைகளை
கொஞ்சம் சேமித்துக்கொள்!
இந்த உலகில்
நிறைய தேவைப்படும்!
இது சுதந்திர நாடு
ஆனால் உனக்கு இல்லை!
நான் உனக்கு
ஒரு பெயர் தான் வைப்பேன்
ஊரார் உன்னை
பல பெயர்களில் அழைப்பர்!
கோபத்தை‌ மென்று தின்றுவிடாதே
காரி உமிழ்ந்து விடு!
பெரியாரின் சிலைக்கு நேர்ந்தது
நாளை உன் சீலைக்கும் நேரலாம்
மறந்து விடாதே!
கோயில் கருவறையிலும்
நீ கருவறுக்கப்படலாம்
உன்னை காக்க வேண்டிய சட்டம்
அந்த கடவுளைப் போல்
கல்லாய் நிற்கும்!
இத்தனை கேட்டும்
என் கருவிலிருந்து
வெளி வர துடிக்கிறாயே
பாரதி கண்ட
புதுமைப்பெண் நீ தானோ?

                              -மகி

Comments

Popular Posts