இரவு வீட்டுக்கு வந்தவுடன், அப்பாவிடம் தோசை சுட்டு கொடுத்துக் கொண்டே அம்மாவின் அன்றைய complaint "அந்த பையன் சும்மாவே இருக்கறது இல்ல......எப்பவும் அவள அடுச்சுகிட்டே இருக்கான்"

இறுமாப்பாக மீசையில் ஒட்டிக் கொண்டு இருந்த சட்டினியை துடைத்த பின் அப்பாவின் குரல் "என்ன..அண்ணா அடிச்சானா.."

"இல்லப்பா விளையாடிட்டு இருந்தோம்" என்ற ஆசை மகளின் இனிய குரலை காதில் வாங்கிக் கொண்டே புன்முறுவலுடன் அடுத்த தோசை சுட்டாள் அம்மா...

                                    -அகல்

Comments

Popular Posts