அப்பா

"ஐயோ பொம்பள பிள்ளையா?"
-னு கேட்டவங்களுக்கு
"ஆமா! பொம்பள பிள்ளைதான்"
-னு சொல்லி sweet குடுத்தவர் !

"காசு இல்லனாலும்
என் பொண்ணு convent ல தான் படிக்கணும்"
-னு  சொல்லி கஷ்டப்பட்டவர் !

"பையன் இல்லையே"
-னு  கேட்டவங்களுக்கு
"மகனுக்கு மகனா வளர்த்த
மகள் இருக்கா" னு சொன்னவர்

மத்த பொண்ணுங்க மாதிரி
அடுப்படியில கிடக்கக்கூடாதுன்னு
"அவள வேலை வாங்காத"
-னு மனைவியை கண்டித்தவர் !

காதலை விட கலாச்சாரத்த விட
கனவுதான் முக்கியம்
னு சொல்லிக்கொடுத்தவர் !

அவள் கனவு நனவாக
தன் தூக்கத்தை எல்லாம்
தொலைத்தவர் !

இத்தனை கஷ்டத்தை தாங்கிப் பிடித்தவரின்
முதல் சொட்டு கண்ணீர்...
அவள் மணமேடையில் இருக்கையில் !

ஆமாம்,
இன்னும் 5 வருஷத்தில்
கண்ணீர் சிந்துறது
அவளாகல்லவா இருக்கும் !

மறந்துவிட்டார் போலும்
தான் செய்ததைத்தான்
மருமகனும் செய்வான் என்று !

Comments

Popular Posts