என் இனிய MCC

பார்த்தவுடன் காதலில்
எனக்கு நம்பிக்கை இல்லை
உன்னைப் பார்க்கும் வரையில்!
செயற்கைக்கு பழகிப்போன என் உடம்பில்
உன் இயற்கை காற்று பட்டதும்
சிலிர்த்துக் கொண்டேன்!
கணிதம் மட்டுமே பயில வந்தேன்
உன் மரங்களுக்கு அடியில் அமர்ந்ததால்
கவிஞனானேன்!
தாயைப் பிரிந்து வந்த எனக்கு
நீயே தாயும் ஆனாய்!
நண்பர்கள் என்ற சொந்தத்தையும்​
நீயே எனக்கு கொடுத்தாய்!
கம்பிகளுக்குப் பின்னால் கைதியாக
இருக்கும் மான்களை பார்த்திருக்கிறேன்!
உன்னிடம் மட்டும்தான் அவை
கைகோர்த்து விளையாடுவதை பார்க்கிறேன்!
பசிக்கு டே கேன்டீன்
படிக்க மில்லர் லைப்ரரி
விளையாட பெவிலியன்
அரட்டை அடிக்க கட்டர்ஸ்
இணையத்திற்கு கிபில்'ஸ் நெட் சென்டர்
மணி பார்க்க சன்டயல்
பாரம்பரியத்திற்கு ஆண்டர்சன் ஹால்
பரிட்சைக்கு எக்ஸாமினேஷன் ஹால்
இப்படி உன் அழகை
சொல்லி மாளாது!
இமை கொட்டாமல்
உன் இயற்கையை ரசித்ததில்
என் இளங்கலை முடிந்துவிட்டது!
மீண்டும் உன்னிடம் வருவேனா?
எனக்கு தெரியவில்லை!
ஆனால் நிச்சயம்
என் மகனையும் மகளையும்
உன்னிடம் அனுப்பிவைப்பேன்!
உன்னைவிட வேறு யார்
அவர்களை நன்றாக
பார்த்துக்கொள்வார்?
நீயே சொல்
என் இனிய MCC!
Live Love MCC!

                                 -மகி

Comments

  1. Mcc மரங்களும் கைகள் தட்டின காற்றின் மூலம் உன் கவிதையைக் கேட்டு...

    ReplyDelete

Post a Comment

Popular Posts