Thursday, 17 January 2019

குருதித் தாகம்

குருதித் தாகம்...
தானமில்லை, தாகம்தான்
எனக்கு!

நான் காட்டுமிராண்டியோ,
காட்டேரியோ என்னவென்று
எனக்கு சொல்லத் தெரியவில்லை!

என்னோடு இருந்த
எனக்காகவே இருந்த
உன்னையும் அழவைத்துப் பார்த்தேன்!

எனக்காக நீ தூக்கம் தொலைத்த
இரவுகள் அறிந்தும்
மீண்டும் வலி கொடுத்தேன்!

எனக்குப் பிடித்ததை செய்து
எனக்குப் பிடித்ததையே நீ
உண்டபின்னும் உன்னை
எட்டித்தான் உதைத்தேன்!

சொல்லப்போனால்
தினம் தினம் உன் இரத்தத்தை
உறிஞ்சிக் குடித்தேன்!
அவ்வளவு தாகம் எனக்கு
குருதித் தாகம்!

ஆனால் முடிந்தால்
இன்னொரு வாய்ப்புத்தாயேன்!

ஐந்து வருட கொடுமைக்காரனுக்கு
மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் நீ
பத்து மாதம் வலி தந்த எனக்கு
கொடுக்கமாட்டாயோ?

உன் உதிரத்தில் உதித்து
குருதியை குடித்து
உலகிற்கு வந்தவள்,
மீண்டும் ஒருமுறை
உன்னை அழவைக்கமாட்டேன்!

                           -இருதயா

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...