அவன் கண்களில் என்ன?
த(க)ண்ணீரோ?
அவன் அழுகிறானா?
அப்படி இருக்கக் கூடாதே!
ஒருவேளை தூசியாக இருக்குமா?
அப்படித்தான் இருக்க வேண்டும்!
பாவம்!
அவனை விட்டு விடுங்கள்!
அடக்கி வைத்த அழுகையை
அவன் அவிழ்த்து விடட்டும்!
இமைகளுக்குள் புதைத்த கண்ணீரை
இனியாவது கன்னங்கள் காணட்டும்!
விம்மி வரும் அழுகையை
விழுங்க முடியாமல் விக்கிய
அவன் குரல்வளைகளின் வலி
இன்றோடு போகட்டும்!
உணர்ச்சியற்ற உயிர் பிண்டமாய்
அவன் வாழ்ந்தது போதும்!
பாவம்!
அவனை விட்டுவிடுங்கள்!
-மகி
No comments:
Post a Comment