Monday, 11 July 2022

ஒரு வரிக் கவிஞர்கள்

நான் உடைந்து அழும் நேரங்களில்
நான் தேடுவதெல்லாம்
ஒற்றை வரி கவிதைகள் தான்... 


"விடு! விடு! பாத்துக்கலாம்! "
"நான் இருக்கன்ல... "
போன்ற கவிதைகளோடு
அதைச் சொல்லும் கவிஞர்களும்
நமக்கென இருந்தால்
போதும் தானே... 

                                -மகி

Sunday, 3 July 2022

எப்படியும் மிஞ்சும்

எத்தனை முறை கழுவியும்
விடாமல் ஒட்டிக்கொள்ளும்
அந்த 0.01 சதவீத கிருமியைப் போல
ஆயிரம் போலி சமாதானங்கள் சொல்லியும்
விடாமல் ஒட்டிக் கொள்கிறது
இந்த குற்ற உணர்ச்சி... 

                               -மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...