சென்னையில் மழை


மேகத்தோடு பகைத்துக்கொண்டு
சென்னைக்கு வந்த மழை
தனது நண்பனான ஏரியை
எதிர்பார்து தெருத்தெருவாய் அலைகிறது!
கட்டி அணைக்கும் நண்பனுக்கு பதிலாக
கண்ட இடமெல்லாம்
கட்டிடங்களை    கண்டதால்
பாசத்தால் ஏங்குகிறது
அங்கேயே தேங்குகிறது!

                                    -மகி

Comments

Popular Posts