நாடெங்கும் ipl பற்றிய
விவாதம் அரங்கேற
நாங்கள் மட்டும் கேட்க நாதியின்றி
நீதி கேட்டு தெருவில் நிற்கிறோம்!
மூச்சுக்கு முந்நூறு முறை
விவசாயம் தான் எங்கள்
மூச்சு என்று சொல்லிக்கொண்டே
எங்கள் மூச்சையும் சேர்த்து
சுவாசித்துவிடுகிறீர்!
பண்ணப் பழகடா பச்சை படுகொலையும்
என்றதால் தானோ
பட்டினிக்கொலைகளை அரங்கேற்றுகிறீர்!
நாட்டை காக்க நாங்கள்
துளிர்விட்டு எழுந்தால்
துண்டு துண்டாக
வெட்ட நினைக்கிறீர்!
ஆலமரமாக நாங்கள் இருப்பதால் தானே வெட்டுகிறீர்!
உம்மை போல் சீமைக்கருவேலமரமாக
இருந்திருந்தால் வேடிக்கை
பார்த்திருப்பீர்கள் அல்லவா???

                                       - மகி

Comments

Popular Posts