Sunday, 29 April 2018

காதலித்தால் தான்
காதல் கவிதை வருமாம்
என் காதலன் யாரென
தேடினேன்!

துன்பத்திலும் பயத்திலும்
என் கரம்பற்றி நடந்தவன்
ஒருநாளில் ஒருமுறையேனும்
அவன் முகத்தில் விழிக்காமல்
இருந்ததில்லை!

நெஞ்சைத் தொட்டுப்பார்த்தால்
துடிப்பது என் இதயமா
அவன் இதயமா
தெரியவில்லை!

மூன்று மணி நண்பர்கள் என்பார்கள்,
மூன்று மணிக்கு
மனம் குழம்பி, இமை கனத்து
உறக்கமும் வேடிக்கை காட்ட
அவனை நினைக்கும்போது
நான் இருக்கிறேன் என்பான் -
மூன்று முறை மணியடித்து !

ஆம்! கடிகாரத்தின் காதலி நான்!
                  
                                      - இருதயா

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...