'போய்ட்டு வாறன்'
என்றே வந்தார்கள்!
அடுத்த முறை சொல்ல
உயிரோடு இருக்கமாட்டோம்
என்பது தெரியாமலே!
சாரைசாரையாய் வந்தார்கள்!
தங்கள் சாவிற்கு
சங்குகள் முழங்க
தயாராக இருக்கிறது
என்பது தெரியாமலே!
சுட்டெரிக்கும் சூரியனை
பொருட்படுத்தாமல் வந்தார்கள்!
தாங்கள் சுட்டுக்
கொல்லப்படுவோம்
என்பது தெரியாமலே!
வீரநடை போட்டு வந்தார்கள்!
தங்களை வீழ்த்த
குள்ள நரிகள் காத்திருக்கும்
என்பது தெரியாமலே!
உயிரையும் தியாகம்
செய்ய துணிந்தார்கள்!
ஈழத்தை போல தாமும்
வஞ்சிக்கப்படுவோம்
என்பது தெரியாமலே!
இறுதியில் உயிரையும்
விட்டார்கள்!
நீதிக்கு பதிலாக நிதியைத்
தரப் போகிறார்கள்
என்பது தெரியாமலே!!!
-மகி
Comments
Post a Comment