ஆஸிஃபா
கைத்தடிக்கும் கண்ணாடிக்கும்
பயந்து நடுங்கிய காவிகள்
இன்று கோயில் கருவறையில்
கருவறுத்துவிட்டார்கள்!
மதியிழந்த மதவாதிகள்
முழுமதியை சிதைத்துவிட்டார்கள்!
ரத்தவெறி பிடித்த உங்களுக்கு
சிறு ரத்தம் கசிந்தால் மட்டும் தீட்டா?
பாஞ்சாலியை காத்த கண்ணன்
ஆஸிஃபாவை வஞ்சித்தது ஏன்?
அதற்கும் மதம்தானா காரணம்?
- மகி
Comments
Post a Comment