Wednesday, 24 July 2019

இலையுதிர் காலம்

மரங்களுக்கு மட்டும் அன்றி
மனிதருக்கும் வேண்டும்
இலையுதிர் காலம்!
நம்பியவரெல்லாம் விலகிப் போனால்
நாமும் மொட்டை மரம்தான்!
இது யாரின் குற்றம்?
உதிர்ந்து சென்ற இலையின் குற்றமா?
உதிர விட்ட மரத்தின் குற்றமா?
உதிர்த்து விட்ட விதியின் குற்றமா?
தெரியவில்லை!
இவ்வளவு தான்
மரத்திற்கும் இலைக்கும்
உள்ள சொந்தமா?
இல்லை! இல்லவே இல்லை!
உதிர்ந்து விடும் என்று தெரிந்தும்
இலைக்கு இடம் கொடுக்கும் மரம்!
உதிர்ந்த பின்னும்
மரத்திற்கு உரமாகும் இலை!
இவைகளை போல
அன்பு செய்ய
நமக்கும் வேண்டும் ஒரு
இலையுதிர் காலம்!

                                  -மகி

Thursday, 11 July 2019

மீன் குழம்பு

அத்தை வைத்த மீன் குழம்புக்கு
அவ்வளவு கிராக்கி!
அதை நினைத்தாலே
தீரா சுனையாக
என் நாவூறுகிறதே!
அதை தட்டில் வைத்து
சோற்றோடு சேர்ந்து பிசைகையில்
பல கைகள் வந்து சேரும்
அதை பங்கு போட!
முந்துவோருக்கு மீனும்
பிந்துவோருக்கு முள்ளும் ஆதலால்
சில சமயம்
நாகரீக நாய்களாவோம்!
உண்மையில் அவ்வளவு கிராக்கி தான்
அந்த மீன் குழம்பிற்கு!
  
                                      -மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...