Wednesday, 24 July 2019

இலையுதிர் காலம்

மரங்களுக்கு மட்டும் அன்றி
மனிதருக்கும் வேண்டும்
இலையுதிர் காலம்!
நம்பியவரெல்லாம் விலகிப் போனால்
நாமும் மொட்டை மரம்தான்!
இது யாரின் குற்றம்?
உதிர்ந்து சென்ற இலையின் குற்றமா?
உதிர விட்ட மரத்தின் குற்றமா?
உதிர்த்து விட்ட விதியின் குற்றமா?
தெரியவில்லை!
இவ்வளவு தான்
மரத்திற்கும் இலைக்கும்
உள்ள சொந்தமா?
இல்லை! இல்லவே இல்லை!
உதிர்ந்து விடும் என்று தெரிந்தும்
இலைக்கு இடம் கொடுக்கும் மரம்!
உதிர்ந்த பின்னும்
மரத்திற்கு உரமாகும் இலை!
இவைகளை போல
அன்பு செய்ய
நமக்கும் வேண்டும் ஒரு
இலையுதிர் காலம்!

                                  -மகி

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...