மறுபக்கம்

"அம்மா, நான் இனி இந்த ஸ்கூல் கு போகல மா..."


வரும்போதே முகமெல்லாம் வாடி வந்திருந்தாள் ஆனந்தி.



"ஏண்டி, என்னதான் ஆச்சு. ஏன் இப்படி பேசுற?"



"என்னால யாரோடையும் பேசக்கூட முடில மா,

பசங்கலாம் பின்னால சொல்லி கிண்டல் பண்ணுறாங்க.
நான் தப்பு தப்பா இங்கிலிஷ் பேசுறனாம்."


"அது கொஞ்ச நாள் அப்படிதாம்மா இருக்கும். சரியாகிடும்."



"இல்லம்மா, நானும் யார்கிட்டயும் பேசமலே எவ்ளோ நாள்தான் இருக்குறது.

இனி இந்த பத்தாங்கிளாஸ் லாம் வேண்டாம் மா
நான் வேணும்னா LKG , UKG கு கிளாஸ் எடுக்க போறேன்."


கண் கலங்கியது, ஆனந்திக்கும் அம்மாவுக்கும்.



#கான்வெண்டில்_படிக்காத_கான்வென்ட்_ஆசிரியைகள்


                                                                       - இருதயா




Comments

Popular Posts