Sunday, 11 August 2019

காதல்...............

அப்பூங்காவின் இருக்கையில்
காதல் புரிய வந்தது
ஓர் இணை..

ஊடல் முடிந்து காதல் மொழி பேசும் வேளை
இருவர் கண்ணும் ஒன்றில் ஒன்று கலந்தன..

அவன் தோள் சாய்ந்து அமர்ந்தவளின் கை
பிணைந்தது அவன் கையுடன்.

அவள் காதோர நரையை வருடியபடி
நினைவுகளில் மூழ்கினான்
அக்கிழவன்..

குறையவில்லை காதல்..
நாற்பது வருடங்களுக்குப் பின்னும்...
                                                                    -எழில்        

1 comment:

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...