காதல்...............

அப்பூங்காவின் இருக்கையில்
காதல் புரிய வந்தது
ஓர் இணை..

ஊடல் முடிந்து காதல் மொழி பேசும் வேளை
இருவர் கண்ணும் ஒன்றில் ஒன்று கலந்தன..

அவன் தோள் சாய்ந்து அமர்ந்தவளின் கை
பிணைந்தது அவன் கையுடன்.

அவள் காதோர நரையை வருடியபடி
நினைவுகளில் மூழ்கினான்
அக்கிழவன்..

குறையவில்லை காதல்..
நாற்பது வருடங்களுக்குப் பின்னும்...
                                                                    -எழில்        

Comments

Post a Comment

Popular Posts