அன்றொரு நாள்...


வீட்டுப்பாடம் முடிக்காமல் போனால் என்ன நடக்கும் என்பது எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. இருந்தும் கொஞ்சம் திமிராகவே சென்றேன்.
மூன்றாம் வகுப்புப் படிக்கும் எனக்கு அன்று கொஞ்சம் அதிகத்திமிரு தான்.


வழக்கத்துக்கு மாறாக கைகள் பழுக்க இரண்டு அடி கூட விழுந்தது. கோபத்தையும் அழுகையையும் மறைத்துக்கொண்டு மேசையில் முகம் கவிழ்த்தி திட்டித் தீர்த்தேன். அப்போது எனக்கு தெரிந்த அதிகபட்ச வசைச் சொற்கள் அனைத்தும் பயன்படுத்தி இருந்தேன்.


அந்த வரிசையில் மூன்று வருடங்கள் என்னுடன் குப்பை கொட்டிய நம்பிக்கைக்குரிய தோழன் திடீரென்று எழுந்து  ஆசிரியரிடம் சென்று வந்தான்.

அவள் என்னை முறைத்துப் பார்த்து சொன்னாள் "பிரேக் அவர்ல என்ன வந்து பாரு".


"அந்த குண்டு ராட்சசிகிட்ட அவன் என்ன சொல்லி இருப்பான்? ஒருவேளை நான் திட்டினத சொல்லிட்டானோ......... சச்சச் இருக்காது" என்றுதான் நினைத்தேன்

நாம் நினைப்பதெல்லாம் நடந்தால் நல்லாத்தான் இருக்கும்.....


ஸ்டாஃப் ரூம் வாசலில் காத்திருந்த என்னை இயல்பான அதே முறைக்கும் பார்வையுடன் "உள்ளே வா" என்றாள்.



"நீ இன்னொரு நல்ல ஃப்ரெண்டா தேடு" என்றாள் என் மரியாதைக்குரிய குண்டு ராட்சசி.......



-அகல்




Comments

Post a Comment

Popular Posts