ஒரு டீ

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா!..

இரண்டு முறை போன் அடித்தது.

மூன்றாவது முறை அம்மா அம்மா....
போனை அட்டென்ட் செய்து "சொல்லு" என்று கத்தினான்.

இன்னும் தூங்கறயா பா? ஆபீஸ்கு டைம் ஆகலயா?

"குளிச்சிட்டு இருந்தேன். இப்ப கெளம்பீருவன். அப்புறமா நானே போன் பன்றன்" என்று சொல்லிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தான்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும்
அம்மா அம்மா....

"இப்ப என்ன உனக்கு? காலைலயே ஏன் உயிர வாங்கர" என்றான்.

சாப்பிட்டயா பா?

"இப்பதான் கடைக்கு வந்தன். அண்ணா நாலு இட்லி ஒரு வடை" என்று சத்தமாக சொல்லி விட்டு போனை கட் செய்தான்.

இங்க அதெல்லாம் இல்ல தம்பி! தினமும் டீ‌ மட்டும் தான குடிப்பீங்க என்றார் கடைக்காரர்.

"தெரியும் அண்ணே! ஒரு டீ போடுங்க" என்றான்...
      
                                  -மகி
                           

Comments

Post a Comment

Popular Posts