குற்றமற்றவள் அவள்..
இன்றிங்கு இல்லை...
அவள் மீது சுமத்தப்படும் குற்றம்..
காதல்..
சொந்தங்களை எதிர்த்து.
காதலனைக் கரம் பிடித்தவள்..
இன்று அவனுடன் பயணித்தாள்..
சாவிலும்..
கொன்றது யார்?
அவளின் பெற்றோர்களா?
இல்லை...
வெறும் உயிரைக் கொன்றவர்கள் அவர்கள்...
கொன்றது இச்சமூகம்..
ஆசையாய் பெற்று வளர்த்த மகளை
அரிவாளால் வெட்டியபோது
அழுகையில்லை அத்தந்தைக்கு...
மாறாக நிம்மதி...
பெண்ணின் பிறப்புறுப்பில்
சாதியை திணிக்கும்
இப்பிணந்திண்ணிச் சமூகத்தின்
குருதிப்பசியை தீர்த்த நிம்மதி...
என்று தனியுமோ இந்தக் குருதிப்பசி??
என்று தனியுமோ இந்தச் சாதிவெறி??
No comments:
Post a Comment