பிரிவுழல்கிறேன்

நெடுந்தூர தொடர்வண்டிப் பயணத்தில்...
என் தோளும் ஏங்கியது...
உன் தலை ஏந்த...

மகிழ்விலும் துயரிலும்..
என் கை தேடியது..
கைப்பேசியில் உன் எண்ணை...

நம் நிழற்படங்கள் கண்டு...
கரைதாண்டிப் புரள்கிறது...
என் கண்ணீர்...

பிரிவு கொடிது...
அதனின் கொடிது...
நட்பில் பிரிவு‌...

                                   -எழில்

Comments

Popular Posts