Sunday, 10 May 2020

ஊழியின் காலம்

ஊழியின் காலம் இது!
எல்லோரும் பதுங்குகுழிகளில்
ஒழிந்து கொண்டார்கள்
சிலர் வானமே கூரையென
தங்கள் சாவை எதிர்நோக்கி
காத்திருந்தார்கள்!
சிலருக்கு அதுவும் இல்லை!
அவர்களுக்கு கிடைத்ததெல்லாம்
இரக்கம் என்ற பெயரில்
சில இலவச பொருட்களும்,
தங்கள் இறுதி சடஙகிற்காக
அரசு கொடுத்த ஆயிரம் ரூபாயும் தான்!
பேருந்துகள் இல்லை!
ரயில்கள் இல்லை!
வழி காட்ட கூகுள் மேப்பும் இல்லை!
ரயில் வராத தண்டவாளங்கள்
தங்களை ஊர் சேர்க்கும்
என்றே அவர்கள் நடந்தார்கள்!
கண்ணயர்ந்த நேரத்தில் 
அவர்கள் மீது
ஏற்றிச்சென்றது
ஒரு ராட்சத இயந்திரம்!
பாவம்!
அவர்களின் அழுகையை கூட
விட்டு வைக்காமல்
விழுங்கி விட்டு செல்கிறது!
அரசு எனும்
அந்த இயந்திரம்!

                                     -மகி

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...