ஊழியின் காலம்
ஊழியின் காலம் இது!
எல்லோரும் பதுங்குகுழிகளில்
ஒழிந்து கொண்டார்கள்
சிலர் வானமே கூரையென
தங்கள் சாவை எதிர்நோக்கி
காத்திருந்தார்கள்!
சிலருக்கு அதுவும் இல்லை!
அவர்களுக்கு கிடைத்ததெல்லாம்
இரக்கம் என்ற பெயரில்
சில இலவச பொருட்களும்,
தங்கள் இறுதி சடஙகிற்காக
அரசு கொடுத்த ஆயிரம் ரூபாயும் தான்!
பேருந்துகள் இல்லை!
ரயில்கள் இல்லை!
வழி காட்ட கூகுள் மேப்பும் இல்லை!
ரயில் வராத தண்டவாளங்கள்
தங்களை ஊர் சேர்க்கும்
என்றே அவர்கள் நடந்தார்கள்!
கண்ணயர்ந்த நேரத்தில்
அவர்கள் மீது
ஏற்றிச்சென்றது
ஒரு ராட்சத இயந்திரம்!
பாவம்!
அவர்களின் அழுகையை கூட
விட்டு வைக்காமல்
விழுங்கி விட்டு செல்கிறது!
அரசு எனும்
அந்த இயந்திரம்!
Comments
Post a Comment