பச்சோந்திகளின் ஃபாசிஸம்!

பச்சோந்திகளின் படையெடுப்பு நடக்கிறது!
மேடைக்கு மேடை
நிறம் மாறிக்கொண்டே
அவை காவி பிரச்சாரம் செய்கிறது!
எல்லா நிறங்களையும் உறிஞ்சி விட்டு
காவியை தூவி செல்கிறது!
வள்ளுவருக்கும் காவி!
பெரியாருக்கும் காவி!
அவற்றுக்கு நீலத்தின் வீடும் 
பிடிப்பதில்லை!
கருப்பின் சிலையும்
பிடிப்பதில்லை!
அதனால் அடித்து உடைத்து செல்கிறது!
பாவம் பகுத்தறிவு இல்லாத 
அந்த பச்சோந்திகளுக்கு தெரியாது
கருப்பும் நீலமும் என்றோ(றும்)
புத்தகங்களுக்குள்ளும்
எங்கள் புத்திக்குள்ளும்
புகுந்துவிட்டன என்று!

                                    -மகி

Comments

Popular Posts