நிலா-3: நிலவவன்
பெரிதும் கருணை கொண்ட
பேரழகி புவியை
போட்டிகள் அற்ற காதலனாய்
சுற்றி வருகிறான் நிலா
அவளைச் சுற்றி பலர்
செயற்கை அன்புடன்
உலா வரினும்...
அவள் பார்வையில்
அவன் அன்பே
இயற்கை...
கண்கொட்டாமல் பார்ப்பாள்...
அவனைக் காணாவிடின்
இருண்டு போவாள்..
கண்ணாமூச்சி ஆட்டம் உண்டு..
காதலர்கள் இடையே சிக்கித் தவிப்பான்
அந்த ஆதவன்...
- எழில் & அகல்
Comments
Post a Comment