ஊடல் கொள்ள
காரணம் தேடி
கோபத்தோடு அவள்
வான்பார்க்க...
நிலா உனை
தூது அனுப்பினேன்...
ஊடல் தீர்ந்து
என் கண்கள் பார்த்து
கண்ணம் ஏந்திய
அவள்
இதழோடு இதழ்
பேசினாள்...
எங்கள் முத்தச் சத்தத்தில் நாணி
நீயோ
ஓடி மறைந்தாய்..
ஆம்...
எங்கள் ஊடலுக்கு
நீ மட்டுமே
(நீ) சாட்சி...
-எழில்
No comments:
Post a Comment