Wednesday, 22 July 2020

நிலா 4: நீயே சாட்சி

ஊடல் கொள்ள 
காரணம் தேடி
கோபத்தோடு அவள்
வான்பார்க்க...
நிலா உனை 
தூது அனுப்பினேன்...

ஊடல் தீர்ந்து
என் கண்கள் பார்த்து
கண்ணம் ஏந்திய 
அவள்
இதழோடு இதழ் 
பேசினாள்...
 
எங்கள் முத்தச் சத்தத்தில் நாணி
நீயோ
ஓடி மறைந்தாய்..
ஆம்...
எங்கள் ஊடலுக்கு
நீ மட்டுமே
(நீ) சாட்சி...

                                 -எழில்

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...