அந்த நான்காவது உயிர்
சாமர்த்தியமாக மூன்று கொலைகள்
நடந்தேறின!
பேச முடியாத சாட்சிகளாய்
ஜெயில் கம்பிகளும்
இரண்டு உயிரற்ற உடல்களும்!
மூன்றாவது உயிருக்கு உடலில்லை
வெறும் பெயர் மட்டும் தான்
"சட்டம்" என்று!
வழிந்தோடும் செங்குருதி
தரையில் மரண வாக்குமூலம் எழுதிக்கொண்டிருந்தது!
யாரும் எதிர்பார்க்கவில்லை
அவர்களின் பெயர்கள்
கொரோனாவோடு சேர்ந்து ஹேஷ்டாகாக பரவும் என்று!
சட்டென்று சுதாரித்துக் கொண்டார்கள்!
நான்காவது கொலைக்கான
வேலைகள் நடந்து வருகிறது!
இந்த முறை சற்று
இரக்கம் காட்டி அந்த உயிரை
விலைக்கு வாங்கலாம்!
இவர்களால் கொல்லப்படாமலும்,
கொள்ளப்படாமலும்
காப்பாற்றப்படுமா
நீதி என்ற உயிர்?
-மகி
#justiceforjeyarajandbennicks
Picture credits: projectinkalaab
Comments
Post a Comment