உன்னை வெறுப்பவர் எவருமில்லை...
உன்னிடம் வேற்றுமை காண்பதில்லை..
உன்னை ஒரு தலையாய் காதலிப்பவர்கள்
பலர்...
நீயாக பிறக்க ஆசை..
என்னவளும் மகிழ்வாள்..
உன்னை அவளுடன் உவமித்தாள்...
பொறாமை இல்லை உன்னுடன்...
நீயாக பிறக்க ஆசை..
மனதில் கறை கொண்டோரும்
மதி மயங்குவர்...
மதி உன் கறைகள் கண்டு...
ஆம்..
நீயாக பிறந்து இவ்வுலகில் அன்பை விதைக்க ஆசை...
-எழில்
No comments:
Post a Comment