நிலா-I

என்னை கேலி செய்கிறார்கள்
உன்‌ மீது காதல் கொண்டதற்காக!
எட்ட முடியாத உன்னை
எட்டிப் பறிக்க நினைத்தது
என் குற்றம் தானா?
நீ மாசடைந்தவள் தான்!
கறைபடிந்தவள் தான்!
முழுமையற்றவள் தான்!
அதனால் என்ன?
உன்னை காதலிக்க கூடாதா?
சுட்டெரிக்கும் கதிரவன் கூட
வெறுக்காத உன்னை
நான் மட்டும் எப்படி வெறுப்பேன்?
விழியுள்ள வரை ரசித்தும்
வாழ்வுள்ள வரை நேசித்தும் இருப்பேன்
அவர்கள் கேலி செய்யும்
பைத்தியக்காரனாய்!

                              -மகி

                                     

Comments

Popular Posts